Wednesday, December 10, 2008

இறுதியாய்...


உன்னை பார்த்து
புன்னகைத்த இதழ்கள்
இன்று உன்னை நினைத்து
புகைத்து புண்ணாகிறது

தாலாட்டாய் துடித்து
உறங்க வைத்த இதயம்
இன்று இடியாய் இடித்து
தூக்கம் களைக்கிறது

பசி மறந்த நாட்கள் நகர
பசித்தும் உண்ண முடியாத
நிலை-இன்று

உடலில் காயம் கொள்ளாமல்
உயிர் மட்டும் வலிக்கிறது
முதல்முறையாய்

கண்கள் சிரிக்க
கண்ணீர் மறைக்க
உள்ளம் மட்டும் அழுகிறது
முதல்முறையாய்

முதல்முறை
தோல்விக்காக
போராடுகிறேன்
இறுதியாய்...

Saturday, November 15, 2008


காலை பத்து மணி 
தூக்கம் விழிக்கையில்
புரிந்தது நேற்று 
வாங்கிய Time piece-n 
மலிவு விலை காரணம்.

தண்ணீரில் கலந்த பாலை
பருகும் போதுதான்
உணர்ந்தேன் '300 ml extra' 

முதல்முறை உடுத்தும் போது 
கையோடு வந்த பொத்தான்கள்
உணர்த்தியது 'End of season sale' 

நாளின் தொடக்கத்திலே
கிடைத்த மாற்றத்துடன்
வீட்டை விட்டு வெளியேறும் போது.
நேற்றிறவு பெய்த மழையில்
பாதம் நனைந்தது 
மனம் குழம்பியது 
இந்த கலிகாலத்திலும்
மழை பெய்கிறதா??

வாசலில் கிடந்த
நாளிதழை, யாரோ
பத்திரப்படுத்தி வைத்திருந்தபோதுதான்
உணர்ந்தேன் 'இன்னும் நல்லவர்கள் 
உயிருற்று இருக்கிறார்கள்' 

மீண்டும் மழை பெய்ய தொடங்குகிறது...


பதினான்கு வருட 
பள்ளி வாசம்.
இளமை தீபமாய் 
சுடர் விட்டு எரிய..

அணையும் தருணம்,
நெய் ஊற்றி..
செழிக்க வைத்தது ,
கல்லூரி வாழ்க்கை.

முழுதும் எரித்துவிட்டு,
நானும் மலை றுகிறேன்
இன்று...

Monday, November 10, 2008

கிரகணம்


இன்பம் துன்பம் 
வாழ்வில் 
சூரியன் சந்திரனாய்... 

தினம் தினம் 
கிரகணமாய் 
என் வாழ்வில் மட்டும்.

Thursday, September 25, 2008

Verse

இமைகள்
கண்களை மூடலாம்
ஆனால் இதயம் மட்டுமே
உறங்க வைக்கும்...!

Monday, September 22, 2008

மன்னிப்பாயா


நிசப்தமான தனிமை
மயானபூமியாய் சலனமற்றிறுக்க
இனிமையான நினைவுகள்
என்றாலும், நீ என்னிடம்
இல்லாததை உண்ர்த்தும்
விஷபோதையாய் உயிர்வதைக்கின்ற்ன.

நினைவுகள் உயிர்கொல்லி
ஆகாமலிருக்க, மீண்டும்
ஆராவார கூட்டத்தினுள்
ஐக்கியமாகிறேன்.
மன்னிப்பாயா?

போதை தெளிய
விஷம் மட்டும்
ஏறுகிறது, குற்றஉணர்வாய்.....

Monday, August 25, 2008

தனிமையில்


"எனக்கென்று ஓர் உயிர்
இத்தருனம் இல்லாத போதும்
உயிர் மாய்க்க மறுத்ததின்
காரணம்
என்றேனும், எவனோ ஒருவனுக்கு
துணை நிற்பேன் என்ற
நம்பிக்கையில்..."
கவிதை படைக்க எண்ணி
கவி நயம் ஏற்றாமல்
உணர்வுகள் மட்டும்
வார்த்தைகளாய் !
தனிமையில்,
என்னை போல...

Wednesday, May 21, 2008

எங்கேயோ ஒலிக்கும் இசை

காற்றில் கசிந்து

என் காதுகளில் இன்பம் சேர்பதுபோல்

அவன் கைகளில் பினைந்திருந்தும்

என்னிடம் புன்னகைக்கிறாள்

நன்பனின் காதலி. .

Monday, March 24, 2008


'நீ பூச்சூடுவதில்லை என்றே
உலகின் அத்தனை பூக்களூம்
ஒற்றை நாளில் மடிகின்றன.., உனக்காக'
என்றேன்,
'ஒற்றை பூ மட்டூம்
வாடாமல் 20 வருடம் காத்திருக்கிறது, உனக்காக'
என்பது போல் விசும்பல் தந்தாய்

Friday, February 22, 2008

அமுதம்

நீ உண்ட மிச்சத்தை
அமுதம் என்றேன்
ஆனால் இன்று மிச்சம் இல்லா
அத்தனையும் நஞ்சாய் உணர்கிறேன். . .

கண்ணீர்

ஏனோ அன்று, கண்ணீர் விட்ட
தடங்களை, முத்தமிட்டு அழித்தாய்
ஆனால் இன்று, உன் முத்தத் தடங்களை
கண்ணீர் விட்டு அழிக்கிறேன். . . .

Thursday, January 3, 2008

வெற்றிடம்

கற்று அறிந்தேன்
வெற்றிடம்
வின்வெளியில்,

இன்று உணர்ந்தேன்
வெற்றிடம்
ஏழையின் வயிற்றில்.