Wednesday, December 10, 2008

இறுதியாய்...


உன்னை பார்த்து
புன்னகைத்த இதழ்கள்
இன்று உன்னை நினைத்து
புகைத்து புண்ணாகிறது

தாலாட்டாய் துடித்து
உறங்க வைத்த இதயம்
இன்று இடியாய் இடித்து
தூக்கம் களைக்கிறது

பசி மறந்த நாட்கள் நகர
பசித்தும் உண்ண முடியாத
நிலை-இன்று

உடலில் காயம் கொள்ளாமல்
உயிர் மட்டும் வலிக்கிறது
முதல்முறையாய்

கண்கள் சிரிக்க
கண்ணீர் மறைக்க
உள்ளம் மட்டும் அழுகிறது
முதல்முறையாய்

முதல்முறை
தோல்விக்காக
போராடுகிறேன்
இறுதியாய்...

4 comments:

geevanathy said...

///உடலில் காயம் கொள்ளாமல்
உயிர் மட்டும் வலிக்கிறது
முதல்முறையாய்//

அருமையாக உள்ளது பாராட்டுக்கள் நண்பரே....

Ragu's said...

மச்சி!!! நல்ல க்விதை எழுதிய உனக்கு என் பாராட்டுகள் ....
புகழேந்தியின் நண்பன் ரகுராம் ...

MSD said...

Mr.Sad Song, stopped blogging? :) Hope you remember me. "Happiness Is a Sad Song..."

Priya said...

Hey no words to say friend... Very nice... 100 likes :)