Friday, February 22, 2008

அமுதம்

நீ உண்ட மிச்சத்தை
அமுதம் என்றேன்
ஆனால் இன்று மிச்சம் இல்லா
அத்தனையும் நஞ்சாய் உணர்கிறேன். . .

கண்ணீர்

ஏனோ அன்று, கண்ணீர் விட்ட
தடங்களை, முத்தமிட்டு அழித்தாய்
ஆனால் இன்று, உன் முத்தத் தடங்களை
கண்ணீர் விட்டு அழிக்கிறேன். . . .