Thursday, September 25, 2008

Verse

இமைகள்
கண்களை மூடலாம்
ஆனால் இதயம் மட்டுமே
உறங்க வைக்கும்...!

Monday, September 22, 2008

மன்னிப்பாயா


நிசப்தமான தனிமை
மயானபூமியாய் சலனமற்றிறுக்க
இனிமையான நினைவுகள்
என்றாலும், நீ என்னிடம்
இல்லாததை உண்ர்த்தும்
விஷபோதையாய் உயிர்வதைக்கின்ற்ன.

நினைவுகள் உயிர்கொல்லி
ஆகாமலிருக்க, மீண்டும்
ஆராவார கூட்டத்தினுள்
ஐக்கியமாகிறேன்.
மன்னிப்பாயா?

போதை தெளிய
விஷம் மட்டும்
ஏறுகிறது, குற்றஉணர்வாய்.....