Sunday, February 9, 2014


சொல்லாத வலிகளின் காயம் தழும்பாக மாறும் புன்னகை 

Wednesday, August 28, 2013

எங்கும் உன் வாசம் !!

தூக்கம் தொலைத்த இரவுகளில்
நீளும் உந்தன் நினைவுகள்…
தூங்கி தொலைத்த இரவுகளில்
துரத்தும் உந்தன் கனவுகள்...

விடிந்தும் உன்னையே தேடுகிறேன்
கனவினை மீட்க முயல்கிறேன்…
கனவு மறந்த போதிலும்
கனவின் தாக்கம் விட்டு போகலை…

கனவை கலைத்து,
நினைவை கோர்க்கிறேன்,
எங்கும் உன் வாசம் உணர்கிறேன்…

முன்னும் பின்னும் யாரடி..
என்னை சுற்றிலும் நீயடி…!!!
 

Wednesday, February 29, 2012

Aversion :/


நீ.. உரிமை என்று கண்டிக்கிறாய்,
பின் பாசம் என்று கொஞ்சுகிறாய்.
நானோ மழை, வெயில்
இரண்டிற்கும் குடை பிடிக்கிறேன்..

Monday, July 26, 2010

விரக்தி

வெகு நாட்கள் புலப்படவில்லை
விரக்தி என்ற சொல்லின் அர்த்தம்.

இன்று என் வாழ்கையின்
அர்த்தம் தேடுகையில் புலப்படுகிறது
விரக்தியின் அர்த்தம் என் வாழ்கை என்று.

Sunday, May 9, 2010

கண்ணீர்

கண்ணீர் வடிக்க இயலாமல்
கவிதை வடிக்கிறேன் ..
ஏனோ ஈரம் காயாமல்
வறண்டு போகிறது
கவிதை மட்டும் ..

நண்பன்

தூரம் சென்றாய்
இருந்தும் நண்பன்
விலகிச் சென்றாய்
இன்றும் நண்பன்
மறந்து சென்றாய்
என்றும் நண்பன்
திரும்பி வந்தாய்
எங்கே என் நண்பன் ..
விரும்பி வந்தாய்
உன்னை தொலைத்தேன்
கனவாய் வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்
நினைவாய் வந்தாய்
இன்று என்னையும் தொலைத்தேன்