நண்பா...இதோ-உனக்காக என் கவிதை!உன் காதலிக்கு,கவிதையை மட்டுமேபரிசளித்துக் கொண்டிருந்தால்...உன் காதலை பரிசளிப்பது எப்போது?உன் கனவுகளில்கவிதை வரைந்தால்,அது அவளுக்குத் தெரியுமா?நெடுந்தூரம் அவளுடன் பயணம் செய்யத்தான்கிளம்பினாய்...ஆனால் - இடையில்கவிதையின் இளம் சூட்டிலேயேதங்கி விட்டாய் போலும்!நிரந்தரம் தேடிநெடுந்தூரம் சென்றவன்தற்செயலாய்கவிதையின் நிழலில் ஒதுங்க...அங்கேயே வீடு கட்டிகுடிகொண்டு விட்டாய் போலும்!உன் கவிதைஉரை வாளாய் இருக்கத்தான்பாரதி அழைத்தான்.ஆனால்,உன் கவிதைகள்காதலெனும் சிற்றின்ப-இறகுகளின் அடியில்முதுகு சொறிவதேனோ?ஆனாலும்அசதி உள்ள மட்டும்வசதி உனக்கில்லை!அந்த இமையத்தையேபுரட்டிப் போடு,உன் கவிதைகளால்!ஆனால்,காதலால் மட்டுமேஉருளுவதேனோ?உருகுவதேனோ?அந்த சித்திர குப்தனின்தலையெழுத்தையேஎழுத வல்லவன் நீ!உன் தலையெழுத்தாய்காதலியின் மறுப்பைஎண்ணியா வேதனைப்படுவது?வெளியே வாவித்தகக் கவியே...உலகம் விரிந்து கிடக்கு!!!தாய் மடியின் ஈரம் தெரியலையா?தாய் நாட்டின் வீரம் புரியலையா?எது உன்னைத் தடுக்கிறது?(இன்னும் நிறைய இருக்கு. ஆனால் என் நேரம் போதாமையால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.)
Post a Comment
1 comment:
நண்பா...
இதோ-
உனக்காக என் கவிதை!
உன் காதலிக்கு,
கவிதையை மட்டுமே
பரிசளித்துக் கொண்டிருந்தால்...
உன் காதலை
பரிசளிப்பது எப்போது?
உன் கனவுகளில்
கவிதை வரைந்தால்,
அது
அவளுக்குத் தெரியுமா?
நெடுந்தூரம் அவளுடன்
பயணம் செய்யத்தான்
கிளம்பினாய்...
ஆனால் - இடையில்
கவிதையின்
இளம் சூட்டிலேயே
தங்கி விட்டாய் போலும்!
நிரந்தரம் தேடி
நெடுந்தூரம் சென்றவன்
தற்செயலாய்
கவிதையின் நிழலில் ஒதுங்க...
அங்கேயே
வீடு கட்டி
குடிகொண்டு விட்டாய் போலும்!
உன் கவிதை
உரை வாளாய் இருக்கத்தான்
பாரதி அழைத்தான்.
ஆனால்,
உன் கவிதைகள்
காதலெனும் சிற்றின்ப-
இறகுகளின் அடியில்
முதுகு சொறிவதேனோ?
ஆனாலும்
அசதி உள்ள மட்டும்
வசதி உனக்கில்லை!
அந்த இமையத்தையே
புரட்டிப் போடு,
உன் கவிதைகளால்!
ஆனால்,
காதலால் மட்டுமே
உருளுவதேனோ?
உருகுவதேனோ?
அந்த சித்திர குப்தனின்
தலையெழுத்தையே
எழுத வல்லவன் நீ!
உன் தலையெழுத்தாய்
காதலியின் மறுப்பை
எண்ணியா வேதனைப்படுவது?
வெளியே வா
வித்தகக் கவியே...
உலகம் விரிந்து கிடக்கு!!!
தாய் மடியின் ஈரம் தெரியலையா?
தாய் நாட்டின் வீரம் புரியலையா?
எது உன்னைத் தடுக்கிறது?
(இன்னும் நிறைய இருக்கு. ஆனால் என் நேரம் போதாமையால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.)
Post a Comment